TNPSC தேர்வுக்கான சென்னையில் இலவச பயிற்சி மையம்

TNPSC தேர்வுக்கான சென்னையில் இலவச பயிற்சி மையம்

தமிழக அரசின் சார்பாக TNPSC,SSC,IBPSC,RRB ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு தேர்வில் எளிதில் வெற்றி பெறும் வகையில் பயிற்சி வகுப்புகள் சென்னையில் இரண்டு இடங்களில் நடைபெறுகிறது.

பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராய கல்லூரியில் 500 இடங்களும், சேப்பாக்கத்தில் உள்ள மாநில கல்லூரியில் 300 இடங்களுக்கும் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதனை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் சேர 29.01.2024 முதல் 12.02.2024 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மதியம் 2 மணி முதல் 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். ஆறு மாத காலம் வாரத்துக்கு இரண்டு முறை வகுப்புகள் நடைபெறும்.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் நீங்கள் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
www.cecc.in என்ற வெப்சைட்டுக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் 044-25954905 மற்றும் 044-28510537 தொடர்பு கொண்டு நீங்கள் முழு விவரங்களையும் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தற்போது எடுத்த கலர் பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் விண்ணப்பதாரரின் கையொப்பம் இரண்டையும் தனித்தனியாக ஸ்கேன் செய்து 200KB மிகாமல் வைத்துக் கொள்ள வேண்டும்.
வாட்ஸ் அப் மொபைல் எண் பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி பூர்த்தி செய்ய வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பத்தை தாக்கல் செய்யும் முன்பாக நீங்கள் கண்டிப்பாக பதிவு செய்த பின்னரே உள்ளே நுழைய முடியும்.

APPLY LINK

www.cecc.in

Leave a Comment